Tuesday, March 10, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம்

நடராஜர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, பாலாலய வைபவம் நேற்று, 08.03.2015 அன்று காலை 09 மணியளவில் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்‌ஷிதர்களின் ஏற்பாட்டின் படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாலாலய வைபவம் மிக பிரம்மாண்டமான அளவிலும்,
ஒவ்வொரு யாக காலத்திலும்,
நாதஸ்வர இன்னிசையுடனும், 
ருக், யஜுர், ஸாமம், அதர்வண வேத கோஷங்களுடனும்,
18 புராணங்களின் பாராயணங்களுடனும்,
சிறப்பான மூல மந்திர ஜபங்களுடனும்,
ஸூத ஸம்ஹிதை போன்ற சிதம்பர புராணத்தைப் பகரும் ஸ்லோகங்களுடனும்,
திருமுறை முற்றோதல்களுடனும்,
தேவார பண்ணிசைகளுடனும்,
பதஞ்சலி பூஜா ஸூக்தங்களின்படி யாகசாலை ஹோம நிகழ்ச்சிகளுடனும்
செவ்வனே நடைபெற்றது.

நேற்று காலை 06 மணியளவில், 6 காலங்கள், 11 யாக குண்டங்கள் கொண்டு பூஜை செய்யப்பட்ட - புனித நீர்க்குடங்கள் - தேவஸபைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, அத்தி மரப் பலகையில் அமைந்த பாலாலய பலகைகளுக்கு சக்தியேற்றம் செய்யப்பட்டு, பிறகு நித்தியப்படி ஆறு கால பூஜைகளில் அபிஷேகம் செய்யப்படும் ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் - ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பொது தீக்‌ஷிதர்களின் தலைமையில், பிரஸாத விநியோகம் செய்யப்பட்டது.

தினந்தோறும் ஆறுகால பூஜைகளும் தேவ ஸபையில் நடைபெறும்.

தேவஸபையில் - ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் (ஸ்படிக லிங்க) அபிஷேகமும், ரத்ன ஸபாபதி (மரகத நடராஜர்) அபிஷேகமும் - காண்பது பெரிதிலும் பெரிதான பலன்களைத் தரக்கூடியது.

பக்தர்கள் வந்து தரிசித்து பெருநட்னமிடும் பெம்மானின் பேரருளைப் பெறுவீர்களாக !

- நி.த.நடராஜ தீக்‌ஷிதர்
http://natarajadeekshidhar.blogspot.in
www.facebook.com/deekshidhar
Mobile : 94434 79572, 93626 09299.









No comments: