Monday, February 22, 2010

நடராஜ பத்து

நடராஜப் பத்து
சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது.
சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.
சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.
வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.
ஸ்ரீ நடராஜரை பழங்கால இலக்கியங்களில் சிறப்புற்றதாக விளங்கும் சிலப்பதிகாரம் (நடராஜர் ஆடிய கொடுகொட்டிக் கூத்து: (28: 67 - 75) - "திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறையாற்பவும் .... இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்") முதற்கொண்டு பல்வேறு இலக்கியங்கள், பாசுரங்கள், பதிகங்கள் அனைத்தும் போற்றி பறைசாற்றுகின்றன.
பிற்காலத்தில் எழுதப்பட்ட பாடல்களிலும் ஸ்ரீ நடராஜரின் தாண்டவங்களை விவரித்துச் சொன்ன பாசுரங்கள் (கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்கள் போன்றவை) மக்களிடம் மிக எளிதில் சென்றடைந்தன.
நாம் இங்கு காணவிருப்பது பிற்காலத்தில் எழுதப்பட்ட, நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது.
மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள்.
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது.
ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.
பாடலாசிரியர் - சிறுமணவை முனுசாமி முதலியார். தற்போது சிறுமணைவை எனும் ஊர் பெயர் மாற்றம் ஏற்பட்டு, திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இவரின் பரம்பரையினர் ஜோதிடம், மாந்த்ரீகம், சித்த வைத்தியம் போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்கியுள்ளனர். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார். இவர் நடராஜ பத்து எனும் பதிகம் தவிர மேலும் ஐந்து விருத்தங்கள் எழுதியுள்ளார்.
சிறுமணவை முனுசாமி அவர்களின் வழிவந்தவர் சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஸ்ரீ நல்லப்பன் நீலகண்ட சிவா. அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டே, நடராஜர் பத்து ஆசிரியரைப் பற்றி விபரங்கள் தெரிந்துகொண்டோம். அவர் மிக ஆர்வமாக பல்வேறு தகவல்களைக் கூறினார்.

பாடல் : 1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)

பாடல் : 2
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.
(ஸ்ரீ நடராஜரின் நடனத்தை நம் கண்முன்னே நிறுத்தும் பாடலாக அமைந்தது)
[நடராஜரின் நடனத்தை நம் கண் முன்னே நிறுத்தும் இந்தப் பாடலை இங்கு ஆடியோவில் கேட்கலாம்]



பாடல் : 3
கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மனித வாழ்வின் சிக்கல்களை நீக்க வேண்டி பாடுவதாக அமைந்தது)

பாடல் : 4
வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அ‎ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
எ‎ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மாந்த்ரீகம், சித்தர்கள் பற்றி கூறியுள்ள பாடல்)

பாடல் 5:
நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமு‎ன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக‎ன் அறு முகன் இருபிள்ளை ‏ இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னி‏டமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை ‏ இதுவல்லவோ ‏
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை ‏
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)

பாடல் 6:
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் ‏ இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்
கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(குறைகளற்ற வாழ்வை பெற வேண்டுவதாக அமைந்த பாடல்)

பாடல் : 7
அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வி‎னை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழு‎வனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமெ‎ன்று
உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உ‎ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ ‏ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(முக்தியை வேண்டுவதாக அமைந்த பாடல்)

பாடல் : 8
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் ‏ இல்லை
யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(செய்த பாபங்களை நீக்க வேண்டிய பாடல்)
[மிகவும் இரக்கமாகப் பாடியுள்ள இப்பாடலை, நெஞ்சம் நெகிழச் செய்யும் ஸஹானா ராகத்தில் இங்கு ஆடியோவில் கேட்கலாம்.
இப்பாடலை பாடியவர் தேமதுரக் குரல் கொண்ட ப்ரம்மஸ்ரீ ஸோம நாகதேவ தீக்ஷ¢தர். 2003ம் ஆண்டில் நாங்கள் வெளியிட்ட நடராஜர் பத்து ஆடியோ கேசட் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.]


பாடல் 9 :
தாயார் ‏ இருந்தென்ன தந்தையும் ‏ இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் ‏ இருந்தென்ன குருவாய் ‏ இருந்தென்ன சீடர்கள் ‏ இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ ‏ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் 10 :
‏இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ ‏
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ ‏ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ ‏ இதுவென்ன சாபமோ, இதுவே உன்
செய்கைதானோ
‏இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்
கெடுவனோ,
ஓஹோ ‏ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ‏ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் ‏ இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் ‏ இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

நடராஜ பத்து பாடல்களைப் பாடி, நடராஜரைப் பணிந்து நற்கதி அடைவோம்.
நி.த. நடராஜ தீக்ஷ¢தர்
CELL : 94434 79572.
MAIL : yanthralaya@yahoo.co.in

22 comments:

S.Muruganandam said...

ஈசனே சிவகாமிநேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே உனது தி்ருவடிகளே சரணம்.

Anonymous said...

very excellent.

ivullagukku thevaiana lines song ketka vaitha umakku mikka nandri

endrum anbudan selvam

Geetha Sambasivam said...

நண்பர் ஒருவர் மூலம் பாடல்கள் ஏற்கெனவே படிக்க நேர்ந்தது. இப்போக் கேட்கிறதிலே என்னமோ பிரச்னையா இருக்கு! நாளைக்குப் பார்க்கிறேன். நன்றி. தாமதமான பின்னூட்டத்துக்கு மிக மிக மன்னிக்கவும்.

Geetha Sambasivam said...

தொடர

Anonymous said...

ஸ்வாமி,
மிக அருமையாக எழுதியுள்ளீர்.தங்களின் பூஜை முறை ஆகமமா?வேதமா?

Anonymous said...

நான் வலை தளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது இந்த அருமையான நடராசபத்து பாடல்களை கண்டேன்.எனக்கு சிவபெருமான் மீது பக்தி அதிகம் உண்டு இந்த பாடல் கிடைத்தது என் பாக்கியம் இப்போது இந்த பாடல் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.சமீபத்தில் நான் கோயில் (சிதம்பரம்) சென்றிருந்தேன் அங்கு எம்பெருமான் நுழைவு வாயிலில் இந்த பாடல் வரிகளை செத்க்கியிருப்பார்கள் அங்கு அமர்ந்து இந்த பாடலை படிக்கும்போது கிடைத்த இன்பம் என்றும் கிடைகாத இன்பமாக நான் உணர்ந்தேன்.

ANGOOR said...

அய்யா மிகவும் அருமையான பாடல் , இதை நான் சிங்கப்பூர்இல் வேலை செய்யும் பொது அங்கு உள்ள கோவிலில் இந்தபாடலை கேட்டு பின்பு பதிவு செய்து வாங்கினேன் , அதன் பிரதியை தங்களின் வலைபதிவுகளில் வைத்தால் அனைவரும் பயன்படுவார்கள் ....பதிவிறக்கம் செய்ய கிழே உள்ள லிங்கை சொடுக்கவும்

http://www.mediafire.com/?n5dytglzk61mp

நடராஜ பத்து -திருத்தணி சுவாமிநாதன் (released 1998 in Singapore)

மேலும் தேவாரதிருமுறை பாடல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய :

www.devarathirumurai.wordpress.com

நன்றி
வேல்தர்மா
ஜெர்மனி

Raja Thatha said...

You all please find the english translation of this great prayer at
http://stotrarathna.blogspot.in/2012/01/nataraja-pathu-tamil.html

Ramachander

Raja Thatha said...

You all please find the english translation of this great prayer at
http://stotrarathna.blogspot.in/2012/01/nataraja-pathu-tamil.html

Ramachander

Sabari said...

Respected Author of this blog, thanks for this blog information, I came across நடராஜ பத்து in song form in Youtube (with beautiful Music), I have given the link here, If You include it in Your blog (by editing it), Devotes can hear the song and melt...

https://www.youtube.com/watch?v=hDSxU4apCpg

Thanks Again.

Unknown said...

SIR, INTHA SONG EN VETTIL ELLARUM PADUVANGA ANAL FULL SONG ENAKKU THERIYATHU INTHA SONG VERY NICE ENAKKU PADUVATHU ORU NALLA VAIPPU ENTRE KOORUVEN THANK YOU VERY MUCH SIR

Seethalakshmi said...

I love my father God Shiva. I am so happy now a days listening this song.

sarayutoayodhya.blogspot.in said...

நல்ல அருமையான பதிவு

Unknown said...

thank you sir

Unknown said...

Fentastic song about Lord Shiva.I love this song very much.

Anonymous said...

Excellent rendition. I have listened to this lyric 10 times over on Youtube. Although I was able to follow your script in Tamil I don't understand the meaning. Is it possible to get the English meaning of this great soul steering song? Or, can somebody refer me to an appropriate link? Mikka Nandri. Vanakkam. mudelys@gmail.com

Unknown said...

Vanakkam Sir ,
Ungaludaiya pathivu arumaiya ullathu

Thank u

Anonymous said...

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இப்பாடலை 10வது வகுப்பு புத்தகத்தில் சேர்க்கவேண்டும்.

TM said...
This comment has been removed by the author.
TM said...

Lucid translation here:
http://www.hindupedia.com/en/Nataraja_Pathu_(Tamil)

ALST Manickam, Coimbatore

Ganpat said...

The place Siru Manavai is now called as Chinna Mandali. It ia about 4 km from Perambakkam.

Unknown said...

Thanks bcz i don't know that place I am from Agni thesam Thiru annamalai i will go chinna mandali shortly