Saturday, January 23, 2010

சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்

சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்
சக்ரதாரிக்கே சக்ரதானம்
ராஜராஜசோழ‎ன்‎ அமைத்த தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள வெற்றிவேல் முருக‎‎ன் சன்னிதியில் உள்ள தூணில், நடராஜர் சிற்பம் - கைகளில் உடுக்கை, தீயகலுக்குப் பதிலாக சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ளதாக அமைந்துள்ளது. மிக அரிய சிற்பம். சிவ வைணவ ஒற்றுமையைப் பேணக்கூடியது. பாம்பின் மீது தாண்டவம் ஆடுவது போல் அமைந்துள்ளது.
மகேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஸத்யோஜாதம், அகோரம், வாமதேவம், தத்புருஷம் மற்றும் ஈசானம்.

ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து சிவ வடிவங்கள் தோன்றின. 5 x 5 = 25 மூர்த்திகள் - மாகேஸ்வர வடிவங்கள் என்று அழைக்கப்படும்.

(1. சந்திரசேகரர் 2. திரிபுரஸம்ஹாரர் 3. ஜலந்தரஹரர், 4. கஜஸம்ஹாரர், 5. நீலகண்டர் 6. சக்ரதானர் 7. விக்னேஸ்வர அனுக்ரஹர் 8. ஸோமாஸ்கந்தர் 9. ஏகபாதர் 10. காலஸம்ஹாரர், 11. உமா மகேசர் 12. ரிஷபாரூடர் 13. தக்ஷ¢ணாமூர்த்தி, 14. கிராதர் 15. பிக்ஷ¡டனர், 16. கல்யாண சுந்தரர் 17. காமஹரர் 18. கங்காளர் 19. சண்டேசானுக்ரஹர் 20. வீரபத்ரர் 21. அர்த்த நாரீஸ்வரர் 22. சங்கர நாராயணர், 23. சுகாசனர் 24.லிங்கோத்பவர் 25. நடராஜர்)
அந்த மாகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தினுள் ஒன்று சக்ரதான மூர்த்தி. மஹாவிஷ்ணுவுக்கு சுதர்சனம் எனும் சக்ரத்தை அருளியவர் சக்ரதான மூர்த்தி.
மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார். (திருவீழிமிழலை புராணம்)
சிந்தை மகிழ்ந்து சிவ பூஜையில் பங்கெடுப்போம். சிறப்பான வாழ்வைப் பெறுவோம்.

4 comments:

Geetha Sambasivam said...

அருமையான தகவல். நன்றி.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

தாங்கள் செய்த உதவிக்கு நான் தான் நன்றி கூறவேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிற்பம் பற்றிய படம் விளக்கம் தகவல்கள் அனைத்துக்கும் நன்றி

vathana said...

நல்லதொரு பதிவு வாசித்து மகிழ்ந்தேன்